ஆன்மிகம்
சென்னை சந்தான சீனிவாசப் பெருமாள் பிரம்மோற்சவ விழா இன்று தொடக்கம்
சென்னை முகப்பேரில் உள்ள சந்தான சீனிவாசப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
சென்னை முகப்பேரில் உள்ள சந்தான சீனிவாசப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சந்தான சீனிவாசப் பெருமாள் கோயிலின் முதலாம் ஆண்டு பிரம்மோற்சவ விழா துவங்கியது. இதனை முன்னையிட்டு இன்று காலை 6.00 மணிக்கு துவஜாரோகணம் எனும் கொடியேற்றம் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் உற்சவ கோலத்தில் வந்த பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழா ஜூன் 28-ம் தேதி திருமஞ்சனம், நாச்சியார் புறப்பாடுடன், இரவு கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.