திண்டுக்கல்: திண்டுக்கல் ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.
நேற்று தொடங்கப்பட்ட ஆனித்திருவிழாவில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
நன்பகல் 12 மணிக்குக் கொடியேற்றம் நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 7 மணிக்கு அன்ன வாகனத்தில் சுவாமி வீதியுரத நடைபெற்றது. பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் ஜூலை 2-ம் தேதி தெப்பல் உற்சவமும், 3-ம் தேதி ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது.