புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில், பறையத்தூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு கருணாகடாக்ஷி அம்பிகா சமேத கரபாண்டீஸ்வரர் திருக்கோயிலிலும் மற்றும் ஸ்ரீ முத்துகுமாரியம்மன் ஆலயத்திலும் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெறுகின்றது. இத்தலத்து இறைவன் எல்லாவழியுமான நீச்சத்துவத்தையும் போக்கி மறுபிறவியே இல்லாமல் முக்தி அளிப்பதாகப் புராண வரலாறு தெரிவிக்கின்றது. யாக சாலை பூஜைகள் ஜூன் 30 ஆரம்பமாகின்றது.
நாள்: 3.7.2017, நேரம்: காலை 9.00 - 1030 மணி.