வேலூர் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்
வேலூர் மாவட்டம், குன்னத்தூர் கிரமத்தில் உள்ள ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலில் அஷ்டபந்தன மஹா ஸம்ப்ரோக்ஷண நடைபெற உள்ளது.
குன்னத்தூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயில் மிகவும் பழுதடைந்திருந்த காரணத்தால் கர்பக்ரஹம், விமானம், அர்த்த மண்டபம், மஹா மண்டபம், கருடன் ஸன்னதி, த்வஜஸ்தம்பம், பலிபீடம் ஆகியவை புதியதாக கட்டப்பட்டுள்ளது. மேலும், ஸன்னதியினுள் ஏற்கனவே இருந்த பக்த ஆஞ்சநேயருக்கென புதியதாக ஒரு ஸன்னதியும் கட்டப்பட்டுள்ளது.
மேற்படி திருக்கோயிலின் மஹா ஸம்ப்ரோக்ஷணம் நிகழும் ஹேவிளம்பி வருஷம் வைகாசி மாதம் 15-ம் தேதி திங்கட்கிழமை (29.05.2017) சதுர்த்தி திதி புனர்வஸு நக்ஷத்ரம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 6.00 மணிக்கு மேல் 7.30-க்குள் மிதுன லக்னத்தில் மஹா சம்ப்ரோக்ஷணம் விசேஷமாக நடைபெறவுள்ளதால் பக்தர்கள் அனைவரும் ஸம்ப்ரோக்ஷணத்திற்கு வருகை தந்து பெருமாள் தாயார் திருவருள் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு: R.நித்தியக்கல்யாணம் ஐயங்கார் (எ) திலீப் - 9789777750, 9566661516, 0-9440485352