நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெறவுள்ள மயூரநாதசுவாமி திருக்கோயிலில் ஐப்பசி மாத முக்கிய விழாவான கடை முக தீர்த்தவாரி விழா இன்று மதியம் நடைபெறுகிறது.
மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஐப்பசி மாத உற்சவம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல், இவ்வாண்டு துலா உற்சவம் கடந்த அக்.,18-ம் தேதி முதல் தீர்த்தவாரியுடன் தொடங்கியது.
இதில் கடைசி பத்தநாள் உற்சவம் கடந்த 7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 13-ம் தேதி திருக்கல்யாணமும், அதனைத் தொடர்ந்து நேற்று திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இத்தனர்.
முக்கிய நிகழ்வான இன்று கடைமுக தீர்த்தவாரி விழா (நவ.,16) மதியம் 1 மணியளவில் நடைபெறுகிறது. நாளை 17-ம் முடவன் முழுக்கு உற்சவம் நடைபெறுகிறது.