பெண்களே இன்னிக்கு இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பார்கள். அதேபோல தை மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மனுக்குச் சிறப்பாகவே கருதப்படுகிறது. 
பெண்களே இன்னிக்கு இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பார்கள். அதேபோல தை மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மனுக்குச் சிறப்பாகவே கருதப்படுகிறது. 

பொதுவாக ஒவ்வொரு செவ்வாய், வெள்ளியில் வரும் ராகுகால வேளையில் அம்மன் கோவிலுக்குச் சென்று அல்லது அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று அங்கே உள்ள துர்க்கை சந்நிதியில் விளக்கேற்றி வழிபட்டால், சகல தோஷங்களும், கண் திருஷ்டியும் நீங்கும்.

அந்த வகையில், தை மாத வெள்ளிக்கிழமையில் அம்பாளை வழிபடுவது கூடுதல் பலனைத்தரும். அம்பாளுக்கு உகந்த செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக் கொள்ளலாம். துர்க்கை சந்நிதியில் நெய் தீபமேற்றி வழிபட்டால் வீட்டில் மங்கள காரியங்கள் விரைவில் நடக்கும்.

மேலும், அம்பாளுக்கு உகந்த சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், வெண்பொங்கல், கேசரி என ஏதேனும் ஒரு பிரசாதத்தை வழங்கி அம்மனை வழிபட்டு பக்தர்களுக்கு நிவேதனமாக வழங்கி வந்தால் தனம் தானியம் பெருகி நிறைவான வாழ்க்கையை வாழலாம். 

அன்றைய தினத்தில் லலிதா நகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி, சௌந்தர்ய லஹரி, ஸ்ரீசுக்தம், கனகதாரா ஸ்தோத்திரம் உள்ளிட்ட அம்மன் திருநாமங்களை பாராயணம் செய்து வழிபட்டால் வாழ்வில் எதை அடைய விரும்புகிறோமோ அது தானாக அவர்களை வந்தடையும் என்பது உறுதி.

பெண்கள் அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று அம்மனை வழிபட்டு அனைத்து வளங்களும் பெறலாம், இன்னிக்கு மிஸ் பண்ணாதீங்க!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com