நீங்கள் அனுஷம், ரோகிணி, திருவாதிரை நட்சத்திரக்காரர்களாக இருந்தால், இந்த விஷயம் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
நட்சத்திரங்கள் 27-க்கும் ஒவ்வொரு அதிபதி உண்டு, அந்தவகையில் நட்சத்திரங்களில் பதினேழாவது இடத்தைப் பெறும் அனுஷ நட்சத்திரத்துக்கு அதிபதி சனி பகவானும், நட்சத்திரங்களில் நான்காம் இடத்தை வகிக்கும் ரோகிணிக்கு அதிபதி சந்திர பகவானாகவும், ஆறாவது இடத்தை வகிக்கும் திருவாதிரைக்கு அதிபதி ராகு பகவானும் ஆட்சி செய்து வருகின்றன.
அனுஷம், ரோகிணி, திருவாதிரை ஆகிய மூன்று நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் கிரகநிலை சஞ்சாரம் வரும் பிப்ரவரி 16-ம் தேதி வரை சரியில்லாத காரணத்தால் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நன்மையளிக்கும் என்று தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மேலும், இவர்கள் வண்டி, வாகனங்களைப் பயன்படுத்தும் போது கவனமாக இருப்பது அவசியம். இந்த நட்சத்திரக்காரர்கள் சபையில் மற்றவர்களிடம் பேசும் போது, அதாவது வார்த்தைகளை பிரயோகப்படுத்தும் போது மிக மிக மிகக் கவனமாக இருப்பது அவசியம் என்று கூறியுள்ளார்.