திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மார்ச் 21 பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
பங்குனித் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை தேங்காய் தொடும் முகூர்த்தம் நடைபெற்றது. மார்ச் 20-ல் கோயில் கம்பத்தடி மண்டபத்தில் அனுக்ஞை விநாயகர் முன் அனுக்ஞை வாஸ்துசாந்தி பூஜை நடைபெற உள்ளது.
முக்கிய நிகழ்ச்சி
மார்ச் 21 - கொடியேற்றம்
மார்ச் 25 - யானையில் சுவாமி கைபார நிகழ்ச்சி,
மார்ச் 30 - பங்குனி உத்திரம்
ஏப்ரல் 1 - பட்டாபிஷேகம்
ஏப்ரல் 2 - திருக்கல்யாணம்
ஏப்ரல் 3 - தேரோட்டம்
ஏப்ரல் 4 - தீர்த்தவாரி உற்சவம்
விழா நாட்களில் தினமும் ஒரு வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்து அருள்பாலிப்பார்.