திருமலை பாதையில் விபத்து: 7 பேர் காயம்

திருமலை இரண்டாவது மலை பாதையில் கட்டுப்பாட்டை இழந்து, கார் விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலத்த காயமடைந்தனர்.

திருமலை இரண்டாவது மலை பாதையில் கட்டுப்பாட்டை இழந்து, கார் விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலத்த காயமடைந்தனர்.
கன்னியாகுமரியைச் சேர்ந்த ராஜேஷ், விஜயலட்சுமி தம்பதி, அவர்களது உறவினர்களுடன் திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க வியாழக்கிழமை காரில் வந்தனர்.
திருமலைக்கு செல்லும் இரண்டாவது மலைப்பாதையில் வந்து கொண்டிருந்தபோது, இணைப்புச் சாலை அருகில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சுற்றுச்சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், ராஜேஷ், விஜயலட்சுமி அவர்களின் உறவினர்களான ராஜேந்திரன், திவ்யா, நிரஞ்சன், நதியா, திருமால் ஆகிய 7 பேர் பலத்த காயமடைந்தனர்.
இதுகுறித்த தகவலின்பேரில், திருமலை போலீஸார் அங்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு, திருமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இவர்களில், கவலைக்கிடமாக இருந்த ராஜேந்திரன், நிரஞ்சன் ஆகிய இருவரும் திருப்பதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com