ஏப். 29இல் அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் ஏப்ரல் 29-ஆம் தேதி தொடங்கி, மே 10-ஆம் தேதி நிறைவடைகிறது.
ஏப். 29இல் அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் ஏப்ரல் 29-ஆம் தேதி தொடங்கி, மே 10-ஆம் தேதி நிறைவடைகிறது.
அச்சிறுப்பாக்கத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த பிரசித்தி பெற்ற இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் சித்திரைப் பிரம்மோற்சவம் சனிக்கிழமை (ஏப்ரல் 29) அதிகாலை 4.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து நாள்தோறும் முறையே சந்திர பிரபை, அதிகார நந்தி சேவை, திருமுலை பால் உற்சவம், 63 நாயன்மார் உற்சவம், அன்ன வாகனம், யாளி வாகனம், சிம்ம வாகனம், பூத வாகனம், நாக வாகனம், திருத்தேரில் உற்சவமூர்த்திகள் பவனி வந்து அருள்பாலிக்கின்றனர். மே 3-ஆம் தேதி இரவு 8 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் வா.க.சரவணன், ஆய்வாளர் இரா.கலைச்செல்வி, தலைமை அர்ச்சகர் சங்கர் சிவாச்சாரியார் உள்ளிட்ட விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com