காரைக்கால் அருகே உள்ள அம்பகரத்தூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளியையொட்டி 2,400 பக்தர்கள் பங்கேற்ற திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது.
ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையன்று கோயில் வளாகத்தில் 2,400 திருவிளக்கு வழிபாட்டுக்கு நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. சிவாச்சாரியார்கள் நடத்திய சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் வழிபாடு தொடங்கப்பட்டு 12 மணிக்குள் திருவிளக்கு வழிபாடு முடிந்தது.
உத்ஸவ அம்மன் திருவிளக்கு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். நிகழ்ச்சியில் நிர்வாக அதிகாரி (கோயில்கள்) எஸ்.கே.பன்னீர்செல்வம் மற்றும் கோயில் அறங்காவலர்கள் கலந்துகொண்டனர்.