உலக மக்கள் நன்மைக்காகவும், மழை வேண்டியும் லலிதா சகஸ்ரநாம பாராயணம் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆடி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை உலக மக்கள் நன்மைக்காகவும், மழை வேண்டியும் லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடைபெறுவது வழக்கம். அதன்படி காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற பாராயணத்தில், சுமார் 3000-க்கும் மேற்பட்ட பெண்கள் காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை பாராயணம் சுமார் 4 மணி நேரம் பாடினார்கள். மேலும் தம்பதி பூஜை, வடுக பூஜை, சுஹாசினி பூஜை, கன்னியா பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகளும் நடைபெற்றன.
ஸ்ரீசங்கர மடத்தின் பீடாதிபதிகள் ஆசியுடன், காமாட்சி அம்மன் கோயில் குருக்கள் மணி, விழாக் குழுவினருடன் இணைந்து சிறப்பாக பாராயணத்தை நடத்தினார். இதேபோன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கோயில்களில் லலிதா சகஸ்ரநாம பாராயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.