செங்கல்பட்டை அடுத்த திருவடிச்சூலத்தில் 51 அடி உயரத்தில் காட்சியளிக்கும் தேவி கருமாரியம்மன் கோயிலில் 18 அடி உயர ஸ்ரீ நித்திய சிரஞ்சீவி பக்த அனுமன் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெறுகிறது.
இதையொட்டி செவ்வாய்க்கிழமை காலை விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், கோ பூஜை, தேவி ஸ்ரீ கருமாரி ஹோமம், ஸ்ரீமகாலட்சுமி ஹோமம், முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. புதன்கிழமை 6 மணியிலிருந்து 7-30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்தாபகர் மதுரை முத்து சுவாமிகள், பக்தர்கள் செய்துள்ளனர்.