திருப்பதியை அடுத்த சீனிவாச மங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான சனிக்கிழமை காலை யோக நரசிம்மர் அவதாரத்தில் சிம்ம வாகனத்தில் உற்சவமூர்த்தி பவனி வந்தார்.
இதையடுத்து மதியம் 3 மணியளவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரருக்கு சிறப்பு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை உற்சவமூர்த்திகள் ஊஞ்சல் சேவை கண்டருளினர். இரவு 8 மணி முதல் 9 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி வெண் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட முத்துப்பந்தல் வாகனத்தில் மாடவீதியில் திருவீதியுலா வந்தார்.