ஸ்ரீசைலம் கோயிலுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திரம் சமர்பிக்கப்பட்டது.
ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனேஸ்வரர் சமேத பிரமராம்பிகா கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். தற்போது அங்கு பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் மல்லிகார்ஜுன சுவாமிக்கும் பிரமராம்பிகா அம்மனுக்கும் மகா சிவராத்திரி உற்சவத்துக்கு பட்டு வஸ்திரங்கள் சமர்பிக்கப்படுவது வழக்கம். அதன்படி சனிக்கிழமை காலை தேவஸ்தான செயல் அதிகாரி சாம்பசிவ ராவ் தம்பதி ஸ்ரீசைலம் கோயிலுக்கு சென்று பட்டு வஸ்திரத்தை சமர்பித்தனர். அதனை ஸ்ரீசைலம் கோயில் அதிகாரிகள் பெற்று கொண்டனர்.
இவை மகா சிவராத்திரி நாளன்று (பிப்ரவரி 24) மல்லிகார்ஜுன சுவாமிக்கும், பிரமராம்பிகா அம்மனுக்கும் அணிவிக்கப்படும்.