செங்கல்பட்டை அடுத்த திருவடிச்சூலம் பகுதியில் உள்ள மகா பைரவர் ருத்ர கோயிலில் பிப்ரவரி 23-ஆம் தேதி தம்பதி பூஜை மற்றும் சுமங்கலி யாக பூஜை நடைபெற உள்ளது.
இந்தக் கோயிலில் நடைபெறும் தம்பதி பூஜை மற்றும் சுமங்கலி யாக பூஜைகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கோயில் நிர்வாகத்தினரிடம் தங்களது பெயர்களைப் பதிவு செய்து, பூஜையில் கலந்து கொண்டு பைரவரின் அருள் பெறுமாறு கோயில் தலைவர் பைரவ சித்தாந்த சுவாமிகள் கேட்டுக் கொண்டுள்ளார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.