சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு 18 படி பூஜை நடைபெற்றது.
சபரிமலை ஐயப்பனுக்கு செவ்வாய்க்கிழமை காலை வழக்கமான பூஜைகளுடன் உதய அஸ்தமன பூஜை, அஷ்டாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து தந்திரிகண்டரரு ராஜீவரு இரவு 18 படிக்கு பூஜை நடத்தினார். ஜனவரி 19-இல் ஜயப்பன் சாந்தசொரூபனாக காட்சிதருவார். அன்று ஐயப்பனுக்கு அபிஷேகம், பூஜை நடைபெறாது.
20ஆம் தேதி பந்தள மன்னர் மட்டும் சுவாமி தரிசனம் செய்வார். அதன்பிறகு கோயில் நடை அடைக்கப்பட்டு மகரஜோதி விழா நிறைவடையும்.