ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் ஆர்ஜித சேவைகள் குறித்து பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல இடங்களில் தகவல் பலகைகள் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம், காளஹஸ்தியில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ராகு-கேது பரிகார பூஜை மட்டுமே செய்து, மூலவர்களை தரிசித்து திரும்புகின்றனர். ஆனால், இங்கு அதிகாலை முதல் மாலை வரை பல ஆர்ஜித சேவைகளை கோயில் நிர்வாகம் நடத்தி வருகிறது.
ஆனால் இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாததால் பக்தர்கள் இவற்றில் பங்கு கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை.
எனவே, காலை முதல் இரவு வரை உள்ள ஆர்ஜித சேவைகள், அதன் கட்டணம், அவற்றால் ஏற்படும் நன்மைகள் குறித்து கோயிலின் சில முக்கிய பகுதிகளில் தகவல் பலகை ஏற்படுத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
காளஹஸ்தி கோயிலில் நடைபெறும் ஆர்ஜித சேவைகளின் விவரம் வருமாறு: