திருப்பதி ஏழுமலையானை உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் தனது குடும்பத்தினருடன் திங்கள்கிழமை வழிபட்டார்.
திருமலைக்கு ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தினருடன் வந்த அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று, தங்கும் வசதி, தரிசன ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர்.
இரவு திருமலையில் தங்கிய அவர், திங்கள்கிழமை காலையில் விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானைத் தரிசித்தார்.
தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜு ரங்கநாயகர் மண்டபத்தில் ஏழுமலையானின் லட்டுப் பிரசாதங்களை வழங்கினார்.