திருமலையில் சிபிஐ இயக்குநர் வழிபாடு

திருமலையில் சிபிஐ இயக்குநர் ஆலோக் குமார் தனது குடும்பத்தினருடன் புதன்கிழமை ஏழுமலையானை வழிபாடு செய்தார்.
திருமலையில் சிபிஐ இயக்குநர் ஆலோக் குமாருக்கு ஏழுமலையானின் சிறப்பு பிரசாதத்தை வழங்கிய தேவஸ்தான அதிகாரி.
திருமலையில் சிபிஐ இயக்குநர் ஆலோக் குமாருக்கு ஏழுமலையானின் சிறப்பு பிரசாதத்தை வழங்கிய தேவஸ்தான அதிகாரி.

திருமலையில் சிபிஐ இயக்குநர் ஆலோக் குமார் தனது குடும்பத்தினருடன் புதன்கிழமை ஏழுமலையானை வழிபாடு செய்தார்.
இதற்காக அவர் செவ்வாய்க்கிழமை மாலை திருமலைக்கு வந்தார். தேவஸ்தான அதிகாரிகள் அவரை வரவேற்று தரிசன ஏற்பாடு, தங்கும் வசதி செய்தளித்தனர். இரவு திருமலையில் தங்கிய அவர் புதன்கிழமை காலை தோமாலை சேவையில் குடும்பத்துடன் கலந்து கொண்டார். பின்னர் விஐபி பிரேக் தரிசனத்திலும் அவர் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாயகர் மண்டபத்தில் சிறப்பு பிரசாதம் வழங்கினர். பின்னர் அவர் திருச்சானூர் சென்று பத்மாவதி தாயாரை தரிசித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com