திருத்தணி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நீர்மோர், வெல்ல பானகம் வழங்கும் திட்டத்தை தமிழக அறநிலையத் துறை சார்பில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
திருத்தணி மலைக் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்துச் செல்கின்றனர். இதுவரை இல்லாத வகையில் வெயிலின் தாக்கம் 114 டிகிரி செல்சியஸ் வரை திருத்தணியில் அதிகரித்தது. இதனால் நகர வாசிகள் மற்றும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.
இந்நிலையில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் உத்தரவின் பேரில், திருத்தணி முருகன் மலைக் கோயிலில், பக்தர்களுக்கு நீர்மோர் மற்றும் வெல்லம் பானகம் வழங்கும் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு கோயில் இணை ஆணையர் சிவாஜி தலைமை வகித்தார். கோயில் தக்கார் வே. ஜெய்சங்கர், நீர்மோர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
வெயில் காலம் முடியும் வரை கோயில் நிர்வாகம் சார்பில், தினமும் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.