காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கருட சேவை உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள வைகுண்ட பெருமாள் கோயிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம் மே 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கருட சேவை உற்சவம் 2-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி உற்சவர் வைகுண்ட பெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் கருட சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இவ்விழாவில் காஞ்சிபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.