மதுராந்தகத்தை அடுத்த கடப்பேரியில் உள்ள மீனாட்சி சமேத வெண்காட்டீஸ்வரர் கோயிலில், வைகாசி விசாக பிரம்மோற்சவம் திங்கள் கிழமை (மே 29) தொடங்குகிறது.
விழாவையொட்டி திங்கள்கிழமை பஞ்சமூர்த்தி புறப்பாடு, கேடயம் புறப்பாடும், செவ்வாய்க்கிழமை (மே 30) சூரிய பிரபை, சந்திர பிரபை, புதன்கிழமை அதிகார நந்தி சேவை திருமுலைப்பால் நிகழ்ச்சி, பூதவாகனம் புறப்பாடு ஆகியவை நடைபெறுகிறது. வியாழக்கிழமை
(ஜூன் 1) நாகவாகனப் புறப்பாடும், வெள்ளிக்கிழமை யாளி வாகனம்,திருக்கல்யாணம் மற்றும் பஞ்சமூர்த்தி புறப்பாடும் நடைபெறுகிறது. சனிக்கிழமை (ஜூன் 3) சிம்ம வாகனம், யானை வாகனம், ஞாயிற்றுக்கிழமை திருத்தேர் உலாவும் நடைபெறுகிறது.
திங்கள்கிழமை (ஜூன் 5) அன்னவாகனம், குதிரை வாகனமும், செவ்வாய்க்கிழமை கேடயம் புறப்பாடு, பிச்சாடனர் புறப்பாடு, கைலாச பர்வதம் புறப்பாடு ஆகியவையும் நடைபெறுகிறது. புதன்கிழமை (ஜூன் 7) நடராஜர் உற்சவம், பஞ்சமூர்த்தி புறப்பாடு, மஞ்சள் நீர் வீதிஉலா, பஞ்சமூர்த்தி புறப்பாடு, தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. வியாழக்கிழமை (ஜூன் 8) சங்காபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.