கபில தீர்த்தத்தில் லட்சம் வில்வார்ச்சனை

திருப்பதியில் கபிலேஸ்வரசாமி கோயிலில் லட்சம் வில்வார்ச்சனை புதன்கிழமை நடைபெற்றது.
கபில தீர்த்தத்தில் லட்சம் வில்வார்ச்சனை

திருப்பதியில் கபிலேஸ்வரசாமி கோயிலில் லட்சம் வில்வார்ச்சனை புதன்கிழமை நடைபெற்றது.
திருப்பதி கபிலதீர்த்தத்தில் உள்ள கபிலேஸ்வரசாமி கோயிலில் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு ஹோம மகோற்சவம் நடைபெற்று வருகிறது. கோயிலில் எழுந்தருளியுள்ள மூர்த்திகள் அனைவருக்கும் தொடர்ந்து ஹோமங்கள் நடத்தப்பட்டு வருகிறது. 
அதன்படி தற்போது ருத்ர யாகம் நடைபெற்று வருகிறது. 
இதன் ஒரு பாகமாக புதன்கிழமை காலை கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் கபிலேஸ்வரசாமியை எழுந்தருள செய்து அவருக்கு லட்சம் வில்வார்ச்சனை நடைபெற்றது. 
இதில் திரளான பக்தர்கள், கோயில் அதிகாரிகள், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர். 
இதில் ரூ. 500 செலுத்தி பங்கேற்ற பக்தர்களுக்கு கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. இதையொட்டி இரவு 8 மணிக்கு உற்சவமூர்த்திகளான கபிலேஸ்வரசாமி மற்றும் காமாட்சி அம்மன் இருவரும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com