முத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை விழா

வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயிலில் கார்த்திகை மாத அமாவாசை பூஜை அண்மையில் நடைபெற்றது.
முத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை விழா

வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயிலில் கார்த்திகை மாத அமாவாசை பூஜை அண்மையில் நடைபெற்றது.
 இதையொட்டி, காலை மூலவர் அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், கோயில் வளாகத்தில் ஸ்ரீசுதர்சன வேள்வி பூஜை, ஸ்ரீதர்மசாஸ்தா வேள்வி பூஜை ஆகியவை நடைபெற்றன. பின்னர் மாலை உற்சவர் அம்மனுக்கு 51 திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. அம்மன் நீலாயதாட்ஷி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தார். பின்னர் இரவு கோயில் வளாகத்தில் அம்மன் உலா நடந்தது. மேலும், அம்மன் ஊஞ்சல் தாலாட்டு, ஐயப்பன் திருவிளக்கு பூஜை, அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. விழாவில் கோயில் அறக்கட்டளைச் செயலர் ஆறு.லட்சுமண சுவாமிகள், அன்னதானக் குழுத் தலைவர் பிரபாகரன், அறக்கட்டளை பொருளர் ர.செல்வம் மற்றும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com