கண்டிகை - பொன்மார் இணைப்புச்சாலையில் வேங்கடமங்கலம் கிராமத்தில் உள்ள திருவேங்கடலெஷ்மி சமேத திருவேங்கடப் பெருமாள் திருக்கோயிலில் வரும் 23ம் தேதி வியாழக்கிழமை மஹா ஸம்ப்ரோக்ஷணம் நடைபெறுகிறது.
திருவேங்கடலெஷ்மி சமேத திருவேங்கடப் பெருமாள் திருக்கோயிலில் புதியதாக தாயார் சன்னதி, ஆண்டாள் சன்னதி பிரதிஷ்டை செய்யப்பட்டு, மஹா சம்ப்ரோஷணம் (கும்பாபிஷேகம்) நவம்பர் 23ம் தேதி வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு மேல் 10.30 க்குள் நடைபெறுகின்றது.
அன்று மாலை 4 மணிக்குள் ஸ்ரீபத்மாவதி ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கல்யாணம் நடைபெறும். யாகசாலை பூஜைகள் செவ்வாயன்று ஆரம்பமாகின்றது.
கோயில் முகவரி
திருவேங்கடலெஷ்மி ஸமேத திருவேங்கடப்பெருமாள் திருக்கோயில்
வேங்கடமங்கலம்
நெ.9, கண்டிகை - பொன்மார் இணைப்புச் சாலை,
சென்னை - 600 127
கோயிலுக்கு வரும் வழி: தாம்பரத்திலிருந்து சேலையூர், அகரம் வழி 9 கி.மீ. - 51ஏ பேருந்து
தாம்பரம் - வண்டலூர் உயிரியல் பூங்கா, கண்டிகை வழியாக 55சி பேருந்து
தி.நகர், மேடவாக்கம், சித்தாலப்பாக்கம், பொன்மார் வழியாக 19 கி.மீ. - ஜே51 பேருந்து
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : 9382727555/7358739759/9444622695