திருப்பதி ஏழுமலையானை நடிகை பிரியங்கா நாயர் வெள்ளிக்கிழமை வழிபட்டார்.
திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க மலையாள நடிகை பிரியங்கா வியாழக்கிழமை இரவு தனது குடும்பத்தினருடன் திருமலைக்கு வந்தார். இரவு அங்கு தங்கிய அவர், வெள்ளிக்கிழமை காலை கல்யாண உற்சவ சேவையில் கலந்து கொண்டு ஏழுமலையானைத் தரிசித்தார். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு, தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதம் வழங்கினர்.