குமரன்குன்றம் திருப்புகழ்மன்றம் மற்றும் முருகுகவி அறப்பணிதிருப்புகழ் ஆராய்ச்சி மையம் இணைந்து நடத்திய 40-வது ஆண்டு மாபெரும் படித்திருவிழா குரோம்பேட்டை குமரன்குன்றம் அருள்மிகு பாலசுப்ரமண்ய சுவாமி திருக்கோயிலில் ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று நடைபெற்றது.
அச்சமயம் திருமுருகனின் திருவுருவங்கள் - 16 (ஷோடச மகா மூர்த்தங்கள்) என்னும் நூல் வெளியிடப்பட்டது. குமரன்குன்றம் திருப்புகழ் மன்றத்தின் சார்பில் வெளியிடப்படும் நூல்கள் வரிசையில் பதினெட்டாகும்.