சென்னை, கங்கா நகரில் நங்கநல்லூர் ஸர்வமங்களா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாளுக்கு மே 2-ம் தேதி ஆறாவது மஹாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
ஸ்வஸ்திஸ்ரீ விளம்பி ஸம்வத்ஸரம் சித்திரை மாதம் 19-ம் தேதி புதன்கிழமை (மே 2,2018) அனுஷ நக்ஷத்ரம் கூடிய சுபதினத்தில் மிதுன லக்னத்தில் காலை 9 மணி முதல் 10 மணிக்குள் ஆலய ஸ்தாபகர் பூஜ்யஸ்ரீ ராஜகோபால ஸ்வாமிகள் தலைமையில் ஸ்ரீவித்யா ஸம்ப்ரதாயப்படி நடைபெற உள்ளது.
ஏப்ரல் 28-ல் விக்னேஸ்வர பூஜையுடன் 1-ம் கால பூஜை தொடங்கி மே 1-ம் தேதி மாலை 5-ம் கால பூஜைகள் வரை சங்கல்பம், ஹோமம், பூர்ணாஹூதி நடைபெறுகிறது.
அனைவரும் இவ்வைபவத்தில் கலந்துகொண்டு ஸ்ரீ அம்பாளின் அருளைப்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.