சென்னை, அம்பத்தூரில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மீ நரஸிம்ஹ அனுக்ரஹா ட்ரஸ்டின் 5-ம் ஆண்டு சதுர்வேத ஸர்வ சாகா ஸம்மேளனம் நடைபெறுகிறது.
ஸ்ரீ வேதங்களை போற்றும் வகையில் வேத வித்வான்களை கௌரவிக்கும் வகையிலும் வேதங்களில் உள்ள பல சாகைகளின் பாராயணங்களையும் சகல ஜனரக்ஷார்த்தமாக ஹோமங்களையும் விருது வழங்கும் விழா மற்றும் உபன்யாசங்கள் முதலான ஸத் கார்யங்களை 2018 ஏப்ரல் மாதம் 24, 25, 26, 27, 28, 29, 30 ஆகிய தேதிகளில் சிறப்பாக நடத்துவதற்கு ட்ரஸ்ட் மூலம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் ஆஸ்திகர்கள் அனைவரும் திரளாக கலந்துகொண்டு நடக்கவிருக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தாராளமான முறையில் பணம் பொருள் சரீர கைங்கர்யங்களை செய்து வேத வித்வான்களின் ஆசியையும் ஸ்ரீ லக்ஷமி நரஸிம்ஹரின் அனுக்ரஹத்தையும் அடைய
வேணுமாய் கேட்டுக்கொள்கிறோம்.