மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழாவின் ஏழாம் நாள் இன்று கொண்டாடப்படுகின்றது.
சித்திரைப் பெருவிழா கடந்த ஏப்ரல் 17-ம் தேதி விமரிசையாகத் தொடங்கப்பட்டு கொடியேற்றப்பட்டது. இந்நிலையில், விழாவின் 7-ம் நாளான இன்று சுந்தரேஸ்வரர் நந்திகேசுவரர் வாகனத்திலும், மீனாட்சி யாளி வாகனத்திலும் பவனி வருகின்றனர்.
இன்று இரவு 7.30 மணிக்கு நான்கு மாசி வீதிகளில் சுந்தரேஸ்வரர் மீனாட்சியம்மன் வீதியுலா வரும் திருக்காட்சியை பக்தர்கள் அனைவரும் கண்டு களியுங்கள்.