திருச்சானூரில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம்

திருச்சானூர் பத்மாவதித் தாயார் கோயிலில் செவ்வாய்க்கிழமை காலையில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது.
திருச்சானூரில் நடைபெற்ற கோயில் ஆழ்வார் திருமஞ்சனத்தை முன்னிட்டு கோயிலில் தண்ணீர் பீய்ச்சியடித்து சுத்தம் செய்யும் ஊழியர்கள். 
திருச்சானூரில் நடைபெற்ற கோயில் ஆழ்வார் திருமஞ்சனத்தை முன்னிட்டு கோயிலில் தண்ணீர் பீய்ச்சியடித்து சுத்தம் செய்யும் ஊழியர்கள். 

திருச்சானூர் பத்மாவதித் தாயார் கோயிலில் செவ்வாய்க்கிழமை காலையில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது.
பத்மாவதித் தாயார் கோயிலில் வரும் 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை வருடாந்திர வசந்தோற்சவம் நடைபெற உள்ளது. 
இவ்விழாவை முன்னிட்டு, கோயில் முழுவதையும் தேவஸ்தான ஊழியர்கள் சுத்தம் செய்து வருகிறது. 
அதன்படி கோயில் மகாதுவாரம் முதல் கருவறை வரை அனைத்து இடங்களையும் ஊழியர்கள் வாசன திரவியக் கலவை அடங்கிய நீரைப் பீய்ச்சியடித்து சுத்தம் செய்தனர். இந்தப் பணியில் கோயில் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதையொட்டி காலை 8 மணிமுதல் 11 மணிவரை தரிசனம் ரத்து செய்யப்பட்டது. கோயில் சுத்தப்படுத்தப்பட்ட பின் பகல் 11 மணிக்கு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com