திருமலை கண்காணிப்பு அதிகாரி பணியிட மாற்றம்

திருமலை திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவின் தலைமை அதிகாரி ரவிகிருஷ்ணாவை ஆந்திர அரசு பணியிட மாற்றம் செய்துள்ளது.
திருமலை கண்காணிப்பு அதிகாரி பணியிட மாற்றம்

திருமலை திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவின் தலைமை அதிகாரி ரவிகிருஷ்ணாவை ஆந்திர அரசு பணியிட மாற்றம் செய்துள்ளது.
திருமலைக்கு பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால் ஆந்திர அரசு தேவஸ்தானத்திற்கு தனியாக கண்காணிப்புப் பிரிவை ஏற்படுத்தி உள்ளது. அதன் தலைமை அதிகாரியையும் நியமித்து வருகிறது. 
கடந்த சில ஆண்டுகளாக இப்பிரிவின் தலைமை அதிகாரியை நியமிப்பத்தில் சிக்கல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இப்பிரிவின் தலைமை அதிகாரியாக ரவிகிருஷ்ணா கடந்த ஆண்டில் நியமிக்கப்பட்டார். 
இந்நிலையில் அவரை மாநில உள்துறை அமைச்சகத்தில் உள்ள உளவுத்துறை இணை இயக்குநராக பணியிட மாற்றம் செய்து ஆந்திர அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com