கோடம்பாக்கம் ஆண்டவர் நகர் முதல் தெருவில் வடபழனி முருகன் கோயில் அருகில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் திருக்கோயிலில் அம்மன் மார்பு அளவு தோற்றத்துடனும், முழு அம்மனாகவும் இருவித தோற்றத்துடனும் வீற்றிருந்து அருள் புரிகின்றாள்.
ஆடிப் பூரத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரமாக அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரி அம்மனுக்கு நேற்று ஒரு லட்சத்து எட்டாயிரம் வளையல்கள் அணிவிக்கப்பட்டது. இந்தப் பிரம்மாண்டமான அலங்காரத்தை தரிசிப்பவர்களுக்கு மழலைப் பாக்கியம் கிட்டும். இந்த வளையல் அலங்காரத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர்.