அம்மன் கோயில்களில் ஆடிப் பெருவிழா

மாதவரம் அருகே, செல்லியம்மன், மாரியம்மன், லட்சுமி அம்மன் ஆகிய 3 கோயில்களில் ஆடிப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த செல்லியம்மன், மாரியம்மன்.
சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த செல்லியம்மன், மாரியம்மன்.

மாதவரம் அருகே, செல்லியம்மன், மாரியம்மன், லட்சுமி அம்மன் ஆகிய 3 கோயில்களில் ஆடிப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
இந்த விழாவிற்கு, முன்னாள் அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தி தலைமை வகித்தார். விழாவையொட்டி, செல்லியம்மன், மாரியம்மன், லட்சுமி அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. 
தொடர்ந்து, முப்பெரும் தேவியரை அலங்கரித்து தீபதூப ஆராதனைகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, அம்மன் வீதியுலா நிகழ்வு நடைபெற்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com