ஆவணி மாத பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் நேரம் எது என்று ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் கிரிவலம் பிரசித்தி பெற்றது. இங்குள்ள 14 கி.மீ. தொலைவிலான கிரிவலப் பாதையை வலம் வந்து ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மனை தரிசித்தால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்த நிலையில், ஆவணி மாத பௌர்ணமி சனிக்கிழமை (ஆகஸ்ட் 25) மாலை 4 மணிக்குத் தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 26) மாலை 5.35 மணிக்கு முடிவடைகிறது. எனவே, பக்தர்கள் இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் கிரிவலம் வரலாம் என்று ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.