திருத்தணியை அடுத்த கே.ஜி.கண்டிகை அருகே, ஷீரடி சாய்பாபா கோயிலில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
கே.ஜி.கண்டிகை, சாய்நகரில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலில் பொங்கல் விழாவையொட்டி நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு கோயில் நிர்வாகிகள் கோபால்நாயுடு, சாய் சீனிவாசன் ஆகியோர் தலைமை வகித்தனர். காலை 10 மணிக்கு கோ பூஜையும், தொடர்ந்து, மூலவர் சாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர், ஏழை மாணவ, மாணவியர் 40 பேருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் புத்தாடைகள், இனிப்புகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மாணவர்களின் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியும் பல்வேறு போட்டிகள் நடத்தி, அதில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன.