பழனியில் ஜன.25-இல் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்: 31-இல் தேரோட்டம்

பழனியில் தைப்பூசத் திருவிழா ஜனவரி 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் ஜனவரி 31ஆம் தேதி நடைபெறுகிறது.
பழனியில் ஜன.25-இல் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்: 31-இல் தேரோட்டம்

பழனியில் தைப்பூசத் திருவிழா ஜனவரி 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் ஜனவரி 31ஆம் தேதி நடைபெறுகிறது.
பழனி கோயில் தைப்பூசத் திருவிழா வரும் ஜனவரி 25ஆம் தேதி பெரியநாயகியம்மன் கோயிலில் கொடிக்கட்டி மண்டபத்தில் காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவையொட்டி வள்ளி, தேவசேனா சமேதர் முத்துக்குமாரசாமி தினமும் சுவாமி தங்கமயில், தங்ககுதிரை, வெள்ளியானை, வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளிக்காமதேனு, தந்தசப்பரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் நான்கு ரதவீதிகளில் உலா எழுந்தருள்கிறார். 
இதையடுத்து வள்ளி, தேவசேனா சமேதர் முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம் வரும் ஜன.30ஆம் தேதி இரவு 7.45 மணிக்கும், அதைத் தொடர்ந்து 9.30 மணிக்கு மேல் வெள்ளித்தேரில் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் திருத்தேரோட்டம் ஜன.31ஆம் தேதி சந்திரகிரஹணத்தையொட்டி மாலையில் நடைபெறுவதற்கு பதிலாக காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு தைப்பூசத் தேரோட்டம் காலையில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. 
விழா நாள்களில் அடிவாரம் குடமுழுக்கு நினைவரங்கில் பக்தி இன்னிசை, பக்தி சொற்பொழிவு, பட்டிமன்றம், பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பழனிக் கோயில் இணை பாஸ்கரன் செல்வராஜ் தலைமையில் துணை ஆணையர்(பொறுப்பு) மேனகா மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com