கூழமந்தல் விருட்ச விநாயகர் கோயிலில் திங்கள்கிழமை பித்ரு பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
காஞ்சிபுரம்-வந்தவாசி நெடுஞ்சாலையில் உள்ள உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தின் தெற்கே கூழமந்தல் கிராமத்தில் 27 நட்சத்திர அதிதேவதைகள், விருட்ச விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில், மக நட்சத்திர அதிதேவதையும், முன்னோர்களின் தெய்வமுமான பித்ரு பகவானுக்கு திங்கள்கிழமை காலை 9 மணிக்கு கலச ஸ்தாபனம் செய்யப்பட்டது. பின்பு, பலவிதமான நறுமணப் பொருள்களால் அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து, நட்சத்திர விருட்ச விநாயகர், அதிதேவதைகள், ராகு, கேது பகவான்களுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. அப்போது, பித்ரு பகவானை திரளான பக்தர்கள் தரிசித்தனர்.