உலகில் வாழும் அணைத்து ஜீவராசிக்கும் நீர், உணவு, காற்று முக்கியமானவை. அதைச் சீராக கொடுத்துக்கொண்டு இருக்கும் கடவுளுக்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும்.
அண்டத்திலுள்ளதே பிண்டம்
பிண்டத்திலுள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமு மொன்றே
அறிந்து தான் பார்க்கும் போதே - என்று சித்தர் கூற்று.
பொதுவாக உடலை பிண்டம் என்போம். பூமி உள்பட பிரபஞ்சத்தை அண்டம் என்போம். உலகத்தில் உள்ள அனைத்தும் பிண்டத்தில் உள்ளது என்பது ஒரு சூட்சம விதி என்னவென்றால் - பிண்டம் என்பது உடம்பைக் குறிக்கும்.பிரபஞ்ச சக்தியானது பஞ்ச பூதங்களுள் அமைந்துள்ள மனித உடலானது உலகில் உள்ள தாவரப் பொருட்கள் மற்றும் பஞ்சலோகத்தால் அடங்கி உள்ளது. இந்தத் தத்துவங்களின் அடிப்படையில்தான் மனித உயிர் அனைத்து சக்திகளையும் ஆட்டுவிக்கிறது. உலோகங்கள் நமது உடலை அண்டத்துடன் இணைக்கும் மாய வேலையைச் செய்கின்றன என்பதை சித்தர்கள் கூற்று. அதனால் தான் நம் முன்னோர்கள் தங்கள் உடலில் எப்பொழுதும் உலோகதன்மை உடலில் இருக்கும் வண்ணம் ஐம்பொன்னை அணிந்து வந்தனர்.
இந்த உலோகங்களை அணிவதால் உலோகத்தில் உள்ள தாது சத்துக்கள் நம் உடலுக்கு ஈர்ப்பு தன்மை கொண்டு இயக்கும் என்பது அறிவியல்ரீதியான உண்மை. இந்த ஐம்பொன் ஆபரனகளுக்கு அதிக காந்த ஈர்ப்பு சக்தி, ஞானசக்தி, அறிவு ஆற்றல், ஆன்மிக சக்தி, புத்துணர்ச்சி, உடல்ரீதியான ஊக்குவிப்பானாக உள்ளது இவ்வுலகங்கள்.
அதுவே நம் காலங்களில் பேஷன் என்ற பெயரில் பிளாஸ்டிக் மற்றும் கவரிங் அணிவது என்கின்றனர். நம் முன்னோர்கள் சமைப்பதற்கு மண்பாண்டங்கள், வெங்கலம், வெள்ளீயம் பூசப்பட்ட பித்தளை பாத்திரங்களை தான் அதிகமாகப் பயன்படுத்தி வந்தனர். அதையே சீராக பெண் வீட்டாரிடம் தரப்பட்டது. பெண்ணிற்கு சீதனமாக செம்பு குடம், செம்பு தவளை, செம்பு பாத்திரங்கள் மற்றும், தங்க வெள்ளி நகைகள், வெள்ளி பாத்திரம், ஈய சொம்பு என்று கொடுத்து வந்தனர். வேதியல் கோட்பாட்டுக்கு இணங்க இவற்றுள் உலோகத்தின் தன்மையும் உள்ளது. அதையே அறிவியலும் ஜோதிடமும் என்ன கூறுகிறது என்பதைச் சிறு தொகுப்பைப் பார்ப்போம்.
கிரக சக்திகள்
உயர்தர உலோகங்த்தில் கிரங்களிலின் சூட்சமம் மற்றும் இயக்கம் உள்ளது என்பதை நாம் இன்னும் ஆராயவேண்டும்.
- ஜோதிட சிரோன்மணி கே.பி.தேவி - 9840405263