ஸ்ரீகௌசிகேஸ்வரர் கோயிலில் ஸ்ரீசண்டி மஹா யாகம் : அறநிலையத் துறை அமைச்சர் பங்கேற்பு
கௌசிகேஸ்வரர் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஸ்ரீசண்டி மஹா யாகத்தில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வழிபட்டனர்.
காமாட்சியம்மன் சமேத கௌசிகேஸ்வரர் கோயில் சம்வத்சராபிஷேக விழா கடந்த 12 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இவ்விழாவின் விசேஷ நிகழ்வான சண்டி மஹா யாகம் வெள்ளிக்கிழமை கௌசிகேஸ்வரர் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, சிறப்பு விருந்தினராக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், வேலூர் நாராயணி பீடம் சக்தி அம்மா ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழாவில், உலக நன்மை வேண்டி சண்டி மஹா பூர்ணாஹுதி, உபசாரம், தீபாராதனை, தன்வந்திரி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அதிமுக செயலர் வாலாஜாபாத் கணேசன், முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் உள்ளிட்ட அதிகமுவினர், பக்தர்கள் என திரளானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.