பழனி முருகன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஜூன் 26 முதல் 29 வரை யாக பூஜை, அன்னாபிஷேக விழா நடைபெற உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஆனிமாத பௌர்ணமிக்கு முதல்நாள் துவங்கி நான்கு நாட்கள் அன்னாபிஷேகம் நடைபெறும். அதன்படி இந்தாண்டு ஜூன் 26-ல் பழனி மலைக்கோயில் பாரவேல் மண்டபத்தில் 108 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு, யாக பூஜையுடன், மூலவருக்கு சங்காபிஷேகம் செய்து அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.
ஜூன் 27-ல் பௌர்ணமியன்று திருஆவினன்குடியிலும், ஜூன் 28-ல் பெரிய நாயகியம்மன் கோயிலிலும், ஜூன் 29-ல் கோதைமங்கலம் பெரியாவுடையாருக்கும் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.