திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் ஜூலை 1-ம் தேதி அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் சரஸ்வதிக்கு உள்ள ஒரே கோயில் தான் கூத்தனூர் சரஸ்வதி கோயில். ஒட்டக்கூத்தர் வழிபட்டு அம்பாள் அருள் பெற்ற திருத்தலமாகும்.
இத்திருத்தலத்தில் ஜூன் 24-ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் அஷ்டபந்தன விழா தொடங்குகிறது. தொடர்ந்து எட்டு கால யாக பூஜையுடன் ஜூலை 1-ம் தேதி காலை 10.00 மணிக்கு அனைத்து விமானங்களிலும் சமகால கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.
பக்தர்கள் மற்றும் படிக்கும் குழந்தைகள் அனைவரும் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டு சரவஸ்தி தேவியின் பூரண அருளைப் பெறுவோமாக.