மாமல்லபுரம் கருக்காத்தம்மன் கோயிலில் கும்பாபிஷேக 2ஆம் ஆண்டு நிறைவு விழா

மாமல்லபுரம் எல்லையில் அமைந்துள்ள அருள்மிகு கருக்காத்தம்மன் கோயில் கும்பாபிஷேக இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி கோயிலில் சிறப்பு அபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. 
மாமல்லபுரம் கருக்காத்தம்மன் கோயிலில் கும்பாபிஷேக 2ஆம் ஆண்டு நிறைவு விழா

மாமல்லபுரம் எல்லையில் அமைந்துள்ள அருள்மிகு கருக்காத்தம்மன் கோயில் கும்பாபிஷேக இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி கோயிலில் சிறப்பு அபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. 
சர்வதேச சுற்றுலாத் தலமாக விளங்கும் மாமல்லபுரத்தின் எல்லையில் கருக்காத்தம்மன் கோயில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இந்தக் கோயிலுக்கு குழந்தை வரம் வேண்டி பெண்கள் வந்து வழிபடுகின்றனர். 
அக்கோரிக்கையை கருக்காத்தம்மன் நிறைவேற்றித் தருவதாக ஐதீகம். இந்தக் கோயில் கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகள் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்தன. 
இப்பணி முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் இரண்டாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழாவுக்கு புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவ்விழாவை முன்னிட்டு விரதம் இருந்த பெண்கள் காலை 9 மணிக்கு மேல் மாமல்லபுரம் கடலுக்குச் சென்றனர். 
கடல் நீர் கங்கை தீர்த்தை மேளதாளத்துடன் ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வந்தனர். அம்மனுக்கு அந்த நீரில் விசேஷ அபிஷேகம் நடைபெற்றது. அதையடுத்து, பூஜைகள் நடத்தப்பட்டு, சிறப்பு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. 
அதை அடுத்து மாலை 6 மணியளவில், உற்சவ அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருக்கோயில் உள் பிரகாரம் வலம் வருதல், அம்மன் ஊஞ்சல் சேவை, மகாதீபம் மற்றும் பிரசாத விநியோகம் ஆகியவை நடைபெற்றன. 
கருக்காத்தம்மன் மூலவருக்கு மாலையில் சிறப்பு அபிஷேகமும், சந்தனக்காப்பு அலங்காரமும் நடத்தப்பட்டன. 
இரண்டாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா, ஆலய நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com