ஏழுமலையான் கோயிலில் 64,467 பக்தர்கள் தரிசனம்

ஏழுமலையானை திங்கள்கிழமை முழுவதும் 64,467 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 23,313 பேர் தலைமுடியைக் காணிக்கையாகச் செலுத்தினர்.

ஏழுமலையானை திங்கள்கிழமை முழுவதும் 64,467 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 23,313 பேர் தலைமுடியைக் காணிக்கையாகச் செலுத்தினர்.
செவ்வாய்க்கிழமை காலை 5 மணி நிலவரப்படி, வைகுண்டத்தில் உள்ள 7 காத்திருப்பு அறைகளில் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனர். அவர்களின் தரிசனத்துக்கு 5 மணி நேரம் தேவைப்பட்டது. நடைபாதை மார்க்கத்தில் வந்த முதல் 20 ஆயிரம் (அலிபிரி 14 ஆயிரம், ஸ்ரீவாரிமெட்டு 6 ஆயிரம்) பக்தர்கள் திவ்ய தரிசன டோக்கன் பெற்று ஏழுமலையானைத் தரிசித்தனர். டோக்கனில் குறிப்பிட்ட நேரத்துக்குச் சென்றால் அவர்கள் 2 மணி நேரத்தில் ஏழுமலையானைத் தரிசித்து திரும்பலாம். 
20 ஆயிரத்துக்கு மேற்பட்டு வரும் பக்தர்கள் தர்ம தரிசனத்தில் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com