ஏழுமலையானை திங்கள்கிழமை முழுவதும் 64,467 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 23,313 பேர் தலைமுடியைக் காணிக்கையாகச் செலுத்தினர்.
செவ்வாய்க்கிழமை காலை 5 மணி நிலவரப்படி, வைகுண்டத்தில் உள்ள 7 காத்திருப்பு அறைகளில் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனர். அவர்களின் தரிசனத்துக்கு 5 மணி நேரம் தேவைப்பட்டது. நடைபாதை மார்க்கத்தில் வந்த முதல் 20 ஆயிரம் (அலிபிரி 14 ஆயிரம், ஸ்ரீவாரிமெட்டு 6 ஆயிரம்) பக்தர்கள் திவ்ய தரிசன டோக்கன் பெற்று ஏழுமலையானைத் தரிசித்தனர். டோக்கனில் குறிப்பிட்ட நேரத்துக்குச் சென்றால் அவர்கள் 2 மணி நேரத்தில் ஏழுமலையானைத் தரிசித்து திரும்பலாம்.
20 ஆயிரத்துக்கு மேற்பட்டு வரும் பக்தர்கள் தர்ம தரிசனத்தில் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.