ஆலங்குடி குருபகவான் கோயிலில் 1,008 சங்காபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றதும், நவகிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் குருபரிகார கோயிலில் மாசிமகா குருவார தரிசன விழா மார்ச் 1-ஆம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, மாசி மாதம் 4-ஆவது வியாழக்கிழமையையொட்டி, குருபகவானுக்கு 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக காலை 9 மணிக்கு ஹோமம், மதியம் 1 மணிக்கு அபிஷேகம், 1.30 மணிக்கு பூர்ணாஹூதி, 2 மணிக்கு குருபகவானுக்கு 1,008 சங்காபிஷேகம், மாலை 6 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. ஹோமத்தில் புனிதநீர் நிரப்பட்ட சங்குகள் சிவலிங்கவடிவில் அமைக்கப்பட்டிருந்தன.