ராஜஸ்தான் முதல்வர் வழிபாடு

திருப்பதி ஏழுமலையானை ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே செவ்வாய்க்கிழமை தனது குடும்பத்தினருடன் வழிபட்டார். 
ஏழுமலையானைத் தரிசித்து திரும்பிய ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவுடன் தேவஸ்தான அதிகாரிகள்.
ஏழுமலையானைத் தரிசித்து திரும்பிய ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவுடன் தேவஸ்தான அதிகாரிகள்.

திருப்பதி ஏழுமலையானை ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே செவ்வாய்க்கிழமை தனது குடும்பத்தினருடன் வழிபட்டார். 
ஏழுமலையானை வழிபட ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே திங்கள்கிழமை இரவு தனது குடும்பத்தினருடன் திருமலைக்கு வந்தார். அங்கு அவரை வரவேற்ற தேவஸ்தான அதிகாரிகள், அவருக்கு தங்கும் வசதியை செய்து தந்தனர். 
இரவு திருமலையில் தங்கிய அவர், செவ்வாய்க்கிழமை காலை அர்ச்சனா சேவையில் ஏழுமலையானைத் தரிசித்தார். தரிசனம் முடித்துத் திரும்பிய அவரை தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாயகர் மண்டபத்தில் அமர வைத்து, லட்டு, வடை, ஏழுமலையான் திருவுருவப் படம் மற்றும் தீர்த்தப் பிரசாதம் வழங்கினர். 
இதையடுத்து, அவர் தனது குடும்பத்தினருடன் காளஹஸ்தி சென்று, அங்கு வழிபாடு நடத்தியபின் ராஜஸ்தான் புறப்பட்டுச் சென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com