ஸ்ரீவேதாந்த தேசிகரின் 750-ஆவது அவதார மஹோத்ஸவம் புதன்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற விளக்கொளி பெருமாள் கோயிலில் வீற்றிருக்கும் தூப்புல் ஸ்ரீவேதாந்த தேசிகரின் 750-ஆவது மஹோத்ஸவம் விமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி, ஸ்ரீவிளக்கொளி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காலை 6.30 மணிக்கு புறப்பாடு சேவை நடைபெற்றது. தொடர்ந்து, பெருமாள், தாயார், வேதாந்த தேசிகருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. நண்பகல் 1.30 மணியளவில் தாயாருக்கு லட்சார்ச்சனை சாற்றுமறை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.