திருமலையில் நாளை மூத்த குடிமக்களுக்கு இலவச தரிசனம்

திருமலையில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 20) மூத்த குடிமக்களுக்கும், புதன்கிழமை (மார்ச் 21) 5 வயதுக்கு உள்பட்ட கைக்குழந்தைகளின் பெற்றோருக்கும் இலவச தரிசனம் வழங்கப்பட உள்ளது. 
திருமலையில் நாளை மூத்த குடிமக்களுக்கு இலவச தரிசனம்

திருமலையில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 20) மூத்த குடிமக்களுக்கும், புதன்கிழமை (மார்ச் 21) 5 வயதுக்கு உள்பட்ட கைக்குழந்தைகளின் பெற்றோருக்கும் இலவச தரிசனம் வழங்கப்பட உள்ளது. 

திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் இரண்டு நாள்கள் மூத்த குடிமக்கள் மற்றும் கைக்குழந்தைகளின் பெற்றோர்களுக்கு இலவச தரிசனம் வழங்கி வருகிறது. அதன்படி மார்ச் 20}ஆம் தேதி மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு இலவச தரிசனம் வழங்கப்படுகிறது. 

இதற்காக காலை 10 மணிக்கு ஆயிரம் பேர், மதியம் 2 மணிக்கு 2 ஆயிரம் பேர், மாலை 3 மணிக்கு ஆயிரம் பேர் என மொத்தம் 4 ஆயிரம் பேருக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது. அதேபோல் மார்ச் 21}ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை 0}5 வயது வரையுள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு சுபதம் வழியாக இலவச தரிசனம் வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பினை பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com