ஜோதிட ரீதியாக இந்த விஷயங்களைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டுமாம்!

ஜோதிட ரீதியாக இந்த விஷயங்களை கட்டாயம் கடைபிடிக்க வேண்டுமாம்!
ஜோதிட ரீதியாக இந்த விஷயங்களைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டுமாம்!

ஜோதிட ரீதியாக வீட்டில் உள்ள ஆண், பெண் இருவரும் ஒருசில விஷயங்களை கடைப்பிடித்தால் தரித்திரம் நம்மை அண்டாதாம். அது என்னவென்று பார்க்கலாம் வாங்க.

ஆண்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை..

• நாம் உடுத்திய பழைய துணிகளை வீட்டின் கதவுகளின் மீது போடக்கூடாது.

• ஆண்கள் கைகளால் இரண்டு கால்களையும் பின்னி உட்காரக் கூடாது 

• உடம்பிலிருந்து உதிர்ந்த மயிரையும், வெட்டிய நகத்தையும், வீட்டில் வைக்கக் கூடாது. உடனே வெளியே எரிந்து விட வேண்டும்.

• திருமணம் போன்ற மங்கள நிகழ்ச்சிக்குச் சென்று வந்தவுடன் குளிக்க கூடாது. சிறிது நேரம் கழித்து குளிக்கலாம்.

• சாப்பிடும் அன்னத்தை உருண்டையாக உருட்டிச் சாப்பிடக்கூடாது.

• ஈரத்துணியை உடுத்திக்கொண்டு உணவு அருந்தக்கூடாது. 

• சவரம் செய்து கொள்ளும் முன்பு குளித்துவிட்டு சாப்பிடுவது நல்லது. 

• தாய் தந்தை உள்ளவர்கள் ஒருபோதும் வெள்ளிக்கிழமையன்று சவரம் செய்துகொள்ள கூடாது.

• இரண்டு கன்னங்களிலும் கைகளை வைத்துக்கொண்டு நிற்பதோ, உட்கார்ந்து கொள்வதோ கூடாது.


பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை..

• மஞ்சள் நூல் கயிற்றில் மட்டுமே திருமாங்கல்யத்தை கோர்த்து அணிந்து கொள்ள வேண்டும்.

• பெண்கள் கோயிலில் அங்கப்ரதக்ஷிணம் செய்யக் கூடாது (பெண்களின் மார்பு பகுதி பூமியில் படக்கூடாது)

• கோயில்களில் பிரசாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது.

• பெண்கள் எப்போதும் முந்தானையைத் தொங்க விட்டு நடக்கக்கூடாது.

• கோயிலில் தெய்வத்தை வணங்கும் பொழுது போது பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக்கொண்டு முன் நெற்றி தரையில் படுமாறு மண்டியிட்டு வணங்க வேண்டும்.

• தலை குளிக்கும் பொழுது சுமங்கலி பெண்கள் சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில் பூசிக்கொண்டு பிறகு குளிக்க வேண்டும்.

• கோலமிடும் போது தெற்கே பார்த்து நின்றுகொண்டு கோலமிடக் கூடாது.

• திருமணம் ஆன பெண்கள் ஒரே ஒரு விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும். ஒரே காலில் இரண்டு மூன்று அணியக் கூடாது, அணிவதால் ஆரோக்கியம் மற்றும் கணவனின் வளர்ச்சி (உடல், வருமானம்) பாதிப்பு அடையும்.

• கர்ப்பமான பெண்கள் உக்கர தேவதைகள் இருக்கும் கோவிலுக்கு போகக்கூடாது.

• பெண்கள் கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை இரண்டு புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும் இட்டுக்கொள்ளவேண்டும். திருமணம் ஆகாதவர்கள், உச்சந்தலையில் இட்டுக்கொள்ளக்கூடாது.

• அமாவாசை, தவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.

• ஒரே சமயத்தில் இரண்டு கைகளாலும் தலையைச் சொறியக் கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com